Dinamalar.com |ஜூலை 30,2010


  • பார்லியை விடவில்லை "விலைவாசி': மூன்றாவது நாளாக முற்றிலும் முடக்கம்

    மூன்றாவது நாளிலும் விலைவாசி உயர்வு பிரச்னை பார்லிமென்டை கலக்கி எடுத்துவிட்டது. ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை நடத்தியே ஆக வேண்டுமென எதிர்க்கட்சிகளும், ஓட்டெடுப்பு இல்லாத விவாதத்தை ஏற்றுக் கொள்ள தயாரென ஆளும் தரப்பும் உறுதியாக நிற்கின்றன. இதனால், பார்லிமென்டின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடங்கிப்போய் கிடக்கின்றன. நேற்று காலை பார்லிமென்ட் கூடுவதற்கு முன்பாக, 10 மணியளவில் இடதுசாரிகள், அ.தி.மு.க., தெலுங்கு தேசம், பிஜுஜனதா தளம் கட்சிகள் ஓரணியாக திரண்டன. இந்த கட்சிகளின் எம்.பி.,க்கள் அவைக்குள் நுழையும் பிரதான வாயில் அருகே அமர்ந்து, ...




  • மதுரை சிறையில் காவலர்கள், கைதிகள் "ஜாலி'

    மதுரை : மதுரை மத்திய சிறையில் டி.ஐ.ஜி., கண்காணிப்பாளர், ஜெயிலர் பதவிகள் தொடர்ந்து காலியாக இருப்பதால், வெளிமாவட்ட அதிகாரிகள் கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர். நேரடி கண்காணிப்பு இல்லாததால் காவலர்களும், தடைசெய்ய பட்ட பொருட்கள் சிறைக்குள் தாராளமாக ஊடுருவதால் கைதிகளும் "ஜாலியாக' உள்ளனர். மதுரை, பாளையங்கோட்டை மற்றும் தென்மாவட்ட சிறைகள் உட்பட கிளை சிறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களை கண்காணிக்கவும், சிறை நிர்வாகத்தை கவனிக்கவும் மதுரையை தலைமையிடமாக கொண்டு டி.ஐ.ஜி., பதவி உருவாக்கப் பட்டது. இப்பதவியை வகித்த கண்ணன், 2009 டிச.,31ல் ...




  • தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் கருணாநிதி முடிவு

    சென்னை : "தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் தான், ஒவ்வொரு ஜாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதை முடிவு செய்ய இயலும்' என, தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: அருந்ததியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கி வருவதை முன்னுதாரணமாகக் காட்டி, வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சொல்லியிருக்கிறார். அவர் வைத்துள்ள கோரிக்கையில் இருக்கும் அடிப்படை நியாயங்களைப் பற்றி எல்லாம் இந்தத் தருணத்தில் நான் விரிவாக விவாதிக்க ...




  • எறும்புகள் மொய்க்க, பெண் சிசு ரோட்டில் வீசப்பட்ட பரிதாபம்

    மேலூர் : பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தை, மதுரை - மேலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் வீசப்பட்டது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நான்கு வழிச்சாலையில் மேலூருக்கு திரும்பும் இடத்தில் உள்ள வாழை தோட்டத்தில் கிணறு தோண்டியபோது எடுக்கப்பட்ட கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை அதற்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். இரு புறமும் பாறாங்கற்கள் வைக்கப் பட்டு, அதன் நடுவில் குழந்தை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றி பார்த்த போது, ...




  • மாணவர்களிடம் இன்ஜினியரிங் கல்லூரிகள் கெடுபிடி: முழு கட்டணத்தையும் உடனே கட்ட நிர்ப்பந்தம்

    சென்னை : பொறியியல் படிப்பில் சேரும் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள், கல்லூரியில் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை; அக்கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவிக்கப் பட்டிருந்தாலும், பல கல்லூரிகள் மாணவர்களிடம் கல்விக்கட்டணத்தையும் செலுத்துமாறு வற்புறுத்தி வருகின்றன. இந்த ஆண்டு முதல் பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேரும், குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டது. இதனால், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பில் ...




  • அதே இடத்தில் பொதுக்கூட்டம்; அ.தி.மு.க.,வுக்கு தி.மு.க., பதிலடி

    கோவை : அ.தி.மு.க.,வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கோவையில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை நடத்த தி.மு.க., முடிவு செய்துள்ளது. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதற்குப் போட்டியாக, கடந்த 13ம் தேதி ஜெயலலிதா பங்கேற்ற பொதுக்கூட்டத்தை அ.தி.மு.க.,வினர் பிரமாண்டமாக நடத்திக் காட்டினர். கடந்த பத்தாண்டுகளில், தமிழகத்தில் எந்த ஒரு பொதுக்கூட்டத்துக்கும் வராத அளவுக்கு மிகப்பெரிய கூட்டத்தைத் திரட்டினர். இதனால், செம்மொழி மாநாட்டினால் மக்களுக்கு ஏற்பட்ட பிரமிப்பு, திசைமாறியது. இந்த சூழலில், கோவையில், ...




  • குறைவாக உயர்த்திய விலைக்கு குறை கூறுவதா? அமைச்சர் தியோரா பதில்

    புதுடில்லி : ""எரிபொருட்களின் விலைகள் மிக குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு விலை நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வரும் வகையிலும், மண்ணெண்ணெய் விலை 50 பைசா வரும் வகையிலும் உயர்த்தப்பட்டுள்ளது,'' என மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார். கடந்த ஜூன் 25ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 35 ரூபாயும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு மூன்று ரூபாயும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விலைவாசி உயர்வு பிரச்னை தொடர்பாக, பார்லிமென்ட் நேற்று மூன்றாவது நாளாக முடங்கியது. இந்நிலையில், ...




  • சச்சின் 203 ரன்: இந்தியா அபாரம்!

    கொழும்பு : சச்சின் இரட்டை சதம், ரெய்னா சதம் அடித்து அசத்த, கொழும்பு டெஸ்டில் இமாலய ஸ்கோரை எட்டிய இந்திய அணி, முன்னிலை பெற்றது. இலங்கை பவுலர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அளித்தனர். இன்று ஒரு நாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ள நிலையில், இப்போட்டி "டிராவில்' முடிவது உறுதியாகி உள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 642 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. பின் முதல் இன்னிங்சை ...




  • இந்த மனிதாபிமானம் இலங்கைக்கு வருமா?

    தூத்துக்குடி : கன்னியாகுமரி அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த சிங்கள மீனவர்கள் ஐந்து பேரை, இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு தண்ணீர், உணவு தந்தனர். இலங்கை, கல்துறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் நிஷாந்த்(23) ரஞ்சித் பவுல் நோரீஸ்(43) அமில பிரசாத்(28) பிரியங்தா பெரைரா(42) சமந்த கருணா ரத்னா(40) ஆகிய ஐந்து சிங்கள மீனவர்கள், கடந்த 24ம் தேதி, அங்கிருந்து மோட்டார் படகில் மீன்பிடிக்கப் புறப்பட்டனர். டீசல் டேங்கில் தண்ணீர் புகுந்ததால், இன்ஜின் பழுதடைந்து, நீரோட்டத்தில் படகு இந்திய கடலுக்குள் வந்தது. அம்மீனவர்கள், இலங்கை கடற்படைக்கு ஒயர்லெஸ் மூலம் தகவல் ...




coimbatore open buzz
coimbatore open buzz free
coimbatore open free business listing
coimbatore open free classifieds

Latest News

SSC Results 2009

ssc DEO results

Login Form

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED
  • Buzz Kovai

    Buzz at Kovai

    Classifieds