|
Dinamalar.com |ஜூலை 30,2010
|
|
-
ரஷ்யாவில் சுட்டெரிக்கும் வெயில்: சிறைகளில் வசதி
மாஸ்கோ: ரஷ்யாவில் வரலாறு காணாத அளவிற்கு கோடை வெப்பத்தின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளதால், ரஷ்ய சிறைகளில் மின்விசிறிகள் வைத்துக் கொள்ள ரஷ்ய அரசு அனுமதி அளித்துள்ளது. குளிர் பிரதேசமான ரஷ்யாவில், இந்த ஆண்டு கோடைகாலத்தில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வரலாற்றிலேயே முதன் முறையாக அதிக அளவிலான வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. வெப்பத்தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பலர் இறந்திருக்கின்றனர். கடந்த காலங்களில் 11 முறை பகல் நேரங்களில் ...


-
பாக்., நடவடிக்கையில் அமெரிக்கா அதிருப்தி
வாஷிங்டன்: "பயங்கரவாதத்துக்கு எதிராக, பாகிஸ்தான் தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதல்ல. இந்த விவகாரத்தில் பாக்., மேலும் தீவிரமாக செயல்பட வேண்டும்' என, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. "பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை பிரிட்டன் பொறுத்துக் கொள்ளாது' என, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளது குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கிரவுலியிடம், செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் எந்த நாட்டையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். பயங்கரவாதத்தை ஒழிக்கும் ...


-
சச்சின் 203 ரன்: இந்தியா அபாரம்!
 கொழும்பு : சச்சின் இரட்டை சதம், ரெய்னா சதம் அடித்து அசத்த, கொழும்பு டெஸ்டில் இமாலய ஸ்கோரை எட்டிய இந்திய அணி, முன்னிலை பெற்றது. இலங்கை பவுலர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அளித்தனர். இன்று ஒரு நாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ள நிலையில், இப்போட்டி "டிராவில்' முடிவது உறுதியாகி உள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 642 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. பின் முதல் இன்னிங்சை ...


-
சிகாகோவில் இந்தியருக்கு கவுரவம்
பாஸ்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர் சுனில் குமார், சிகாகோ பல்கலைக்கழக டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனில் குமார் (42), ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில், வணிகப்பிரிவு துணைத் தலைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவர் சிகாகோ பல்கலைக்கழக வணிகப்பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 2011ம் ஆண்டு, ஜன., 1ம் தேதி தொடங்கி, 5 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் நீடிப்பார். இவர், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தின் முன்னாள் மாணவர் ...


-
பாக்., முகாம்களை அழியுங்கள்: ஆப்கன் ஆதிபர் கர்சாய் ஆவேசம்
 காபூல்: "பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை அழிக்க மேற்கத்திய நாடுகள் முன்வரவேண்டும்' என, ஆப்கன் அதிபர் ஹமீதுகர்சாய் ஆவேசமாக பேசினார். காபூலில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது:பயங்கரவாதிகளுக்கான போர் ஆப்கன் நகரங்களிலோ அல்லது கிராமங்களிலோ நடக்கவில்லை; மாறாக, ஆப்கனுக்கு வெளியே (பாகிஸ்தானில் ) நடந்து வருகிறது என்பதை உலக நாடுகள் தெரிந்து கொள்வதற்கான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக விளங்கும் முகாம்கள், பயிற்சி மையங்கள் மற்றும் நிதி குவியும் மையங்களில்தான் இந்தப் போர் நடந்து வருகிறது. சர்வதேச அளவில் ...


|