-
இந்திய அணியின் பலவீனங்கள் : ஜோன்ஸ் விளாசல்
பெர்த் : பவுலிங் மற்றும் பேட்டிங் என அனைத்து அம்சங்களிலும் இந்திய அணி பலவீனமாக உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பவுலிங்கே ஆகும். வரும் போட்டிகளில் இந்திய அணி, பவுலிங் மற்றும் பேட்டிங்கில் சிறந்து விளங்கும் பட்சத்தில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு கடும் நெருக்கடி அளிக்கலாம் என்று அவர் ...


-
வலிக்குது: இந்திய அணிக்கு மீண்டும் அடி: முத்தரப்பு முதல் போட்டியில் தோல்வி
 மெல்போர்ன்: முத்தரப்பு தொடரை இந்திய அணி மிக மோசமாக துவக்கியது. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம் இந்திய வீரர்கள் மீண்டும் தோல்வி வலியை அனுபவித்தனர். இந்தியா,இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடர் நேற்று துவங்கியது. மெல்போர்னில் நடந்த முதலாவது லீக் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின.சேவக் நீக்கம்: இந்திய அணியில் சேவக் நீக்கப்பட்டார். "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.வினய் மிரட்டல்: ஆஸ்திரேலிய அணிக்கு மாத்யூ ...


-
கிலார்டு தலைமையில் ஆஸ்திரேலியா தேர்தல்
கான்பெர்ரா:ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலுக்கு அந்நாட்டு பிரதமர் ஜூலியா கிலார்டு, தலைமைதாங்குவார் என மீடியா செய்திகள் தெரிவித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சராக உள்ள கெவின் ரூட், உதவி தேவைப்படாது எனவும் என்னுடைய தலைமையில் தேர்தலை வெற்றிகரமாக்க தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் கிலார்டு தெரிவித்துள்ளார். கெவின் ரூட் முன்னாள் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ...


-
ராணுவ ஆட்சிக்கு எதிராக எகிப்தில் 4 வது நாளாக கலவரம்
 கெய்ரோ: எகிப்தில் ராணுவத்திற்கு எதிரான கலவரம் நேற்று, நான்காவது நாளாக தொடர்ந்தது. கால்பந்து போட்டியில், 74 பேர் பலியானதைத் தொடர்ந்து நிகழ்ந்த, இந்த கலவரத்தில் இதுவரை, 12 பேர் பலியாகியுள்ளனர்.
எகிப்தின் வடபகுதியில் உள்ள போர்ட் சயீத் என்ற துறைமுக நகரில், கடந்த 1ம் தேதி நடந்த கால்பந்து போட்டியின் போது, இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட மோதலில், 74 பேர் பலியாகினர். இதன் பின்னணியில் ராணுவம் இருப்பதாக, பாதிக்கப்பட்ட கால்பந்து போட்டிக் குழுவின் ஆதரவாளர்கள் கருதினர்.இதையடுத்து, தலைநகர் கெய்ரோவில், ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி ...


-
சீனாவின் நலன் கருதி ஐரோப்பாவுக்கு உதவுவோம் பிரதமர் வென் ஜியாபோ உறுதி
 பீஜிங்: யூரோ மண்டலத்தில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாடுகளை கடனில் இருந்து மீட்க, உதவ தயாராக இருப்பதாக, சீனா மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் சீனா, 3.2 டிரில்லியன் டாலர் (1டிரில்லியன்-1 லட்சம் கோடி; ஒரு டாலர்-49 ரூபாய்) அளவிற்கு முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டில் கால் பங்கு யூரோ கரன்சியில் உள்ளது.
சமீபத்தில், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் சீனாவிற்கு வந்திருந்த போது, சீனப் பிரதமர் வென் ஜியாபோ அளித்த பேட்டியில், "ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பு(இ.எப்.எஸ்.எப்.,) மற்றும் "யூரோப்பியன் ...


-
தூதரகங்கள் தாக்குதல்
 நியூயார்க்:ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், சிரிய அதிபர் பஷர் அல் அசாத் பதவி விலகக் கோரும் தீர்மானத்தை, ரஷ்யாவும், சீனாவும் தங்கள் தடையாணையை (வீட்டோ) பயன்படுத்தி முறியடித்தன. சிரியாவுக்கு எதிரான தீர்மானம் முறியடிக்கப்பட்டதால், சிரிய எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர். ஆஸ்திரேலியா தலைநகர் கேன்பெரா, பிரிட்டன் தலைநகர் லண்டன், கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ், ஜெர்மனி தலைநகர் பெர்லின், எகிப்து தலைநகர் கெய்ரோ மற்றும் குவைத் ஆகிய நகரங்களில் உள்ள சிரிய தூதரகங்கள் நேற்று அடித்து நொறுக்கப்பட்டன.கனடா தலைநகர் ஒட்டாவாவில், சிரிய தூதரகம் முன், நேற்று அசாத் ...


-
மீண்டும் நான்தான் அதிபர் : ஒபாமா
வாஷிங்டன் : அமெரிக்காவில், விரைவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அப்பதவிக்கு மீண்டும் தானே வருவேன் என்று, இந்நாள் அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார். இதுகுறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, பெரும்சரிவை சந்தித்த அமெரிக்காவின் பொருளாதாரம், தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. அதற்கான நடவடிக்கைகளில் தனது தலைமையிலான அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒருமுறை அதிபரால் இருப்பதால் மட்டுமே, நாட்டின் பொருளதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு வந்திர முடியாது. எனவே, அடுத்த தேர்தலிலும் மக்கள் தன்னை ...


-
அமெரிக்காவுக்கு இடம் கொடுத்தால் தாக்குவோம்: ஈரான் கடும் எச்சரிக்கை
டெஹ்ரான்:ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகள் தாக்குதல் நடத்துவதற்காக எந்த நாடாவது இடம் கொடுத்தால், அந்த நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என அந்நாட்டு ராணுவம் எச்சரித்துள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சந்தேகம் கொண்டுள்ளன. ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில், ஈரானின் தென்பகுதியில் நேற்று முன்தினம், அந்நாட்டின் ராணுவமான ஈரான் புரட்சிப் படை, இரண்டு நாள் போர் ஒத்திகையைத் துவங்கியது. இந்த ஒத்திகை சிறிய அளவில் தான் நடக்கும் என அந்நாட்டு பத்திரிகை ஒன்று ...


-
பனிப்பொழிவில் சிக்கி 300 பேர் பலி
சரஜீவோ : கடும் பனிப்பொழிவில் சிக்கி, ஐரோப்பிய கண்டத்தில் நாடுகள் பெரும்பாதிப்பு அடைந்துள்ளன. பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 எட்டியுள்ளது. இதில் உக்ரைன் நாட்டில் மட்டுமே, 150க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அங்கு மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. போஸ்னியா நாட்டில், பனிப்பொழிவில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில், 6 இஞ்ச்களுக்கும் மேலாக பனி படிந்துள்ளதால், கார்கள் பனியில் மூழ்கியுள்ளன. கடும்பனிப் பொழிவு காரணமாக, லண்டன் ஹூத்ரு விமானநிலையத்தில், விமானங்களின் செயல்பாடு ...


-
ஒசாமாவை காட்டிக் கொடுத்த டாக்டருக்கு அமெரிக்க குடியுரிமை?
வாஷிங்டன்:ஒசாமா பின்லாடன் பதுங்கியிருந்த இடத்தை, அமெரிக்காவுக்குச் சொன்ன, டாக்டர் ஷகீல் அப்ரிடிக்கு அமெரிக்க குடியுரிமை அளித்து அவரைப் பாதுகாக்க வேண்டும் என, அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் (எம்.பி.,க்கள்) கோரியுள்ளனர்.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் பதுங்கியிருந்ததைக் கண்டறிந்த டாக்டர் ஷகீல் அப்ரிடி, அத்தகவலை சி.ஐ.ஏ.,விடம் சொன்னார். அதன் பின், கடந்தாண்டு மே 2ம் தேதி, பின்லாடன் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.அதே மே 22ம் தேதி, சந்தேகத்தின் அடிப்படையில் அப்ரிடி, பாக்., போலீசாரால் கைது செய்யப்பட்டார். ...


|