Kovai City Portal

Tamil Cinema
cinema.dinamalar.com |February 06,2012


Cinema News,Tamil cinema News,Actor,Actress,Kollywood News,bollywood news,gossip
  • தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு ஏமாற்றிவிட்டார்! பிரபுதேவா தந்தை மீது புகார்!!

    எனக்கு தாலி கட்டி விட்டு, குழந்தை பெற்றப் பிறகு ஏமாற்றிவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று நடிகர் பிரபுதேவாவின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. புகார் செய்திருப்பவர் பிரபல பெண் நடன இயக்குனர் தாரா. நூற்றுக்கணக்கான படங்களில் நடன இயக்குனராக...



  • செங்காத்து பூமியிலேயே கிளப்பிவிட்ட உஷ்ணகாத்து...!

    நீண்ட நெடிய போராட்டத்திற்குப்பின் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவின் பெருமுயற்சியால் வெளிவந்திருக்கும் திரைப்படம் பேராசிரியர் ரத்னகுமார் இயக்கி இருக்கும் செங்காத்துபூமியிலேயே. கிராமத்து பின்னணியில் செங்காத்து பூமியிலே படம் சிறப்பாக வந்திருந்தும் இதில் கதாநாயகர்களாக நடித்திருக்கும் பவன் (இவர்...



  • புதுமுக நடிகை இடத்தில் ஸ்ரேயா!

    புதுமுக நடிகை நடிக்கவிருந்த படத்தில் நடிகை ஸ்ரேயா ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழ்ப்பட வாய்ப்புகள் இல்லாததால் இந்தி மற்றும் தெலுங்குப்படங்களில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, தற்போது மும்பையில் இருக்கிறார். இந்நிலையில் புதுப்பட வாய்ப்பு வந்து ஸ்ரேயாவின் வாசற்கதவை தட்டியிருக்கிறது. இயக்குனரின் நிலைமையை...



  • விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் நடிகை கைது!

    வாடா செல்லம் என்ற படத்தில் நடித்த நடிகை கரோலின் மரியத், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழில் வாடா செல்லம் என்ற படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்தவர் கரோலின் மரியத். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். கரோலின் விபச்சார தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது....



  • வசந்தபாலனுக்கு அஞ்சலியின் நன்றிக்கடன்!

    வசந்தபாலன் என்னை ஒரு கூட்டத்தில் ஓரமா வந்து நில்லுன்னு சொன்னாலும் நிற்பேன், அதுதான் அவருக்கு நான் செலுத்தும் நன்றிக்கடன், என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார். வரலாற்றுக் கதையம்சத்துடன் டைரக்டர் வசந்தபாலன் இயக்கியிருக்கும் படம் அரவான். இம்மாதம் ரிலீஸ் ஆகவிருக்கும் இப்படத்தில் நடிகர் பரத்தும், நடிகை...



  • தயாரிப்பாளருக்கும் நடிகைக்கும் 143..யாம்?!

    ஐ லவ் யூ என்ற ஆங்கில வாக்கியத்தை 143 என்ற எண்ணிலும் சொல்வார்கள் இல்லையா?! அதையே பட டைட்டிலாக்கி வளரும் நாயகர் நிதின் சத்யா நடிக்க கதாநாயகியாக நடித்து வருபவர் அறிமுக நாயகி ஷீபா.

    மும்பையைச் சார்ந்த இந்த அம்மணிக்கு சென்னையில் இப்பொழுது எல்லாமுமாக இருப்பது., 143 படத்தின் தயாரிப்பாளரும், பிரபல...



  • இலியானாவை விரும்பும் இந்தி ஹீரோக்கள்!

    நண்பன் பட ஹிட்டைத் தொடர்ந்து இலியானாவை தங்களுக்கு ஹீரோயின் ஆக்கிவிட வேண்டும் என்று பாலிவுட் ஹீரோக்கள் பலரும் துடித்துக் கொண்டிருக்கிறார்களாம். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இலியானாவுக்கு இந்தித் திரையுலகில் இருந்து அழைப்பு வந்தவண்ணம் இருக்கிறதாம். நடிகர் அக்ஷய்குமார் அடுத்து நடிக்க உள்ள...



  • ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் அத்துமீறலா...?

    நள்ளிரவு பார்ட்டியில் நடிகை ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் ஒருவர் அத்துமீறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதனை ப்ரியாமணி மறுத்துள்ளார். சி.சி.எல் எனப்படும் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது. கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு அங்குள்ள ஸ்டார் ஹோட்டலில் விடிய விடிய உற்சாக பான...



  • பெப்சி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்!

    தொழிலாளர் சம்பள பிரச்னையில் ஒரு சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், பெப்சி தொழிலாளர்கள் இன்று(05.02.12) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சினிமா தொழிலாளர்கள் சம்பள பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனால் 10நாட்களுக்கும் மேலாக 100க்கும்...



  • சேவற்கொடியில் திருச்செந்தூர் சூரசம்ஹாரம்!

    சேவற்கொடி என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் திருச்செந்தூர் சூரசம்ஹார காட்சிகள் இடம்பெறுகின்றன. பனேரி பிக்சர்ஸ் சார்பில் தயாராகி வரும் புதிய படம் சேவற்கொடி. பிரபல நீச்சல் வீரர் அருண் பாலாஜி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் நாயகியாக பாமா நடிக்கிறார். இரா சுப்பிரமணியம் கதை, திரைக்கதை வசனம் எழுதி...



Latest News

Buzz Kovai

Buzz at Kovai

Classifieds